|
உலகில்
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள்
தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும்
பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள்
மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ
வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத்
தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல்
நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ்
இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும்
என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ்
இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு
ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில்
செயற்பட்டு வருகின்றது
(ஆட்சிமுறை
அமைப்பு). |