4.5 இயற்பெயரும் சிறப்புப் பெயரும்
|
|||||||||||||||||||||||||
ஒருவரை அல்லது ஒரு பொருளைக் குறிக்கும் இயற்பெரும் சிறப்புப் பெயரும் ஒரு தொடரில் இடம் பெறுமாயின் சிறப்புப் பெயரை முன்னர்ச் சொல்லி இயற்பெயரைப் பின்னர்ச் சொல்வது மரபு. (எ-டு) பேரறிஞர் அண்ணாதுரை இத்தொடரில் பேரறிஞர் என்பது சிறப்புப் பெயர். அண்ணாதுரை என்பது இயற்பெயர். இவ்விரண்டில் சிறப்புப் பெயரை முன்னரும் இயற்பெயரைச் சிறப்புப் பெயரின் பின்னரும் பயன்படுத்தலே மரபு. சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகியன பற்றி வரும். (எ-டு)
(நன்னூல்
- 393) |