4.8 இரக்கும் சொற்கள்
 

ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும்.

என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு)   அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக.

தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு)    நண்பா உன் புத்தகத்தைத் தா.

கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு)    மகனே, எனக்குத் தண்ணீர் கொடு.

இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.

ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை

(நன்னூல் - 407)