4.8 இரக்கும்
சொற்கள் |
|
ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும். ஈ என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும். (எ-டு) அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக. தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும். (எ-டு) நண்பா உன் புத்தகத்தைத் தா. கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும். (எ-டு) மகனே, எனக்குத் தண்ணீர் கொடு. இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.
ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே (நன்னூல் - 407) |