அவரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
|
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் |
|
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
|
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என |
|
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மேல் |