முகப்பு | தொடக்கம் |
சிவபெருமான் முப்புரம் எரி செய்த குறிப்பு |
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
|
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|