84

இளம்

வ-று: ‘படர் மலி  வெற்பர்’  என்றக்கால்,1  உள்ளல்மலிவெற்பர்
என்பதாம்.

‘ஆறு படர்ந்தார்’ என்றக்கால், சென்றார் என்பதாம்.

சேனா.

இ-ள்:2‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறம் 47) கறவை
கன்று  வயிற் படர’   (குறுந். 108) எனப்  படர் என்பது  உள்ளுதலும்
செலவுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்

இ-ள்: படர் என்பது  நினைத்தல்  என்பதன்  பொருளும், செலவு
என்பதன் பொருளும்படும், எ-று.

உ-ம்: ‘வள்ளியோர்ப் படர்ந்து  புள்ளிற்போகி’  (புறம்.  47)  இது
நினைவு, 3‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) இது செலவு.

நச்

இதுவுமது.

இ-ள் : படரே உள்ளல் செலவும் ஆகும் படர் உள்ளுதல்  என்னும்
குறிப்பு உணர்த்துதலேயன்றிச்  செலவு  என்னும்  குறிப்பும் உணர்த்தும்,
எ-று.

4உள்ளல்,   வருத்தக்குறிப்பான் உள்ளுதலும்  வருத்தக் குறிப்பின்றி
உள்ளுதலும்  என  இருவகைத்து  ஆகலின், செலவுப்   பொருட்டாகிய
படரும் இவ்விருவகையும் உடைத்து.

உ-ம் : ‘வள்ளியோர்ப் படர்க்குவர் புலவர் யானும் (புறம். 154)
        5
‘பசந்த மேனியொடு படரட வருந்தி’ (புறம். 159)

எனவும்


1. உள்ளல்நினைத்தல்

2. பொருள் : வள்ளல்களை  நினைந்து பறவைக்கூட்டம் போலச்
      சென்று.

3. பொருள் : கறவை கன்று இருக்குமிடம் செல்ல

4. ஒருவரை நினைத்தலும் ஒருவரிடம் செல்லுதலும்    தன்னிடத்து
      நிகழும் வருத்தத்தால்  அதை    நீக்கிக்   கொள்ள  வேண்டி
      நிகழ்வன ஆதலின் இவ்வாறு எழுதினார்.

5. பொருள் : பசலையுற்ற உடம்பொடு நினைவு  வருத்த வருந்தி.