இளம் வ-று: ‘படர் மலி வெற்பர்’ என்றக்கால்,1 உள்ளல்மலிவெற்பர் என்பதாம். ‘ஆறு படர்ந்தார்’ என்றக்கால், சென்றார் என்பதாம். சேனா. இ-ள்:2‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறம் 47) கறவை கன்று வயிற் படர’ (குறுந். 108) எனப் படர் என்பது உள்ளுதலும் செலவுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய் இ-ள்: படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும்படும், எ-று. உ-ம்: ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி’ (புறம். 47) இது நினைவு, 3‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) இது செலவு. நச் இதுவுமது. இ-ள் : படரே உள்ளல் செலவும் ஆகும் படர் உள்ளுதல் என்னும் குறிப்பு உணர்த்துதலேயன்றிச் செலவு என்னும் குறிப்பும் உணர்த்தும், எ-று. 4உள்ளல், வருத்தக்குறிப்பான் உள்ளுதலும் வருத்தக் குறிப்பின்றி உள்ளுதலும் என இருவகைத்து ஆகலின், செலவுப் பொருட்டாகிய படரும் இவ்விருவகையும் உடைத்து. உ-ம் : ‘வள்ளியோர்ப் படர்க்குவர் புலவர் யானும் (புறம். 154) 5 ‘பசந்த மேனியொடு படரட வருந்தி’ (புறம். 159) எனவும்
1. உள்ளல்நினைத்தல் 2. பொருள் : வள்ளல்களை நினைந்து பறவைக்கூட்டம் போலச் சென்று. 3. பொருள் : கறவை கன்று இருக்குமிடம் செல்ல 4. ஒருவரை நினைத்தலும் ஒருவரிடம் செல்லுதலும் தன்னிடத்து நிகழும் வருத்தத்தால் அதை நீக்கிக் கொள்ள வேண்டி நிகழ்வன ஆதலின் இவ்வாறு எழுதினார். 5. பொருள் : பசலையுற்ற உடம்பொடு நினைவு வருத்த வருந்தி. |