86

தெய்

இ-ள் :  பையுள்  என்னும்  சொல்லும் சிறுமை என்னும் சொல்லும்
நோய் என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘பையுள்  மாலை’ (குறுந்.  195) ‘சிறுமை  யுறுபவோ  செய்
பறியலரே’ (நற் 1).

நச்

இதுவுமது.

இ-ள்  : பையுளும்   சிறுமையும்    நோயின்  பொருளபையுளும்
சிறுமையும் நோயாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் ; பையுள் மாலைப் பழுமரம்படரிய’      (களவியல். 4
                               உரை மேற்கோள்)
‘சிறுமையுறுப செய்பறி யலரே’ (நற் 1)

என வரும்.

வெள்

இ-ள் : பையுள் சிறுமை  என்னும் உரிச்சொற்கள் நோய்  என்னும் குறிப்புணர்த்துவன, எ-று.

உ-ம் : ‘பையுள் மாலை’ எனவும், சிறுமையுறுபவோ செய்பறியலரே’
எனவும் வரும்.

ஆதி

பொருள் : பையுள் - துன்பம் - நோய்ப்பட்ட
             சிறுமை - சிறியது - நோய்ப்பட்ட

எய்யாமை
 

336.

எய்யாமையே யறியாமையே                     (45)

(எய்யாமை அறியாமை)
 

ஆ. மொ. இல.

‘Eyyāmai’ is ignorance.

ஆல்.

‘Eyyāmai’ means ignorance

பி. இ. நூ.

நேமி. சொ. 58

எய்யாமை அறியாமை

இளம்

வ-று :  எய்யா    மையலை,    (குறிஞ்சிப்.   8)    என்றக்கால்
அறியாமையலை, என்றவாறாம்.