சேனா. இ-ள் : ‘கம்பலை மூதூர்’ (புறம். 54) எனவும், ‘ஒரு பெருஞ் சும்மையொடு’ எனவும், 1‘கலிகொளாய மலிபு தொகுபு எடுத்த’ (அகம்.11) எனவும் 2‘உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே’ (நற். 203) எனவும், கம்பலை முதலாகிய நான்கும் அரவமாகிய இசைப் பொருண்மை யுணர்த்தும், எ-று தெய். இ-ள் : கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ-று. உ-ம் : கம்பலை மூதூர்’ (புறம்54),‘ஒலி பெருஞ் சும்மையொடு’, ‘கலி கொ ளாயம்’ (அகம்.11), உயவுப் புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே’ (நற். 203). நச். இஃது இசை. இ-ள் : கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள கம்பலை சும்மை கலி அழுங்கல் என்று சொல்லப்பட்ட இந்நான்கும் அரவமாகிய இசைப் பொருண்மையை உணர்த்தும், எ-று. உ-ம் :3 ‘களிறுகவர் கம்பலை போல’ (அகம். 96) 4 ‘தனிமழை பொழியும் தண்பரங் குன்றில் கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’ (மதுரைக் 263,-4) ‘கலி கொளாயம்மலி தொகுபு எடுத்த’ (அகம். 11) ‘உயவுப் புணர்ந் தன்றிவ் வழுங்க லூரே’ (நற். 203) என வரும். ‘கலிகொள் சும்மை’ என்பதனுள் ‘கலி’ செருக்கினை யுணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனால் கொள்க.
1. பொருள் : ஒலிமிக்க தோழியர் கூட்டம் மிகுந்து கூடி எடுத்த 2. பொருள் : இவ்வொலி மிக்கவூர் வருத்தம் மேலிட்டது. 3. பொருள் : யானையைக் கவரும் ஓசை போல 4. பொருள் : துளிகளையுடைய மேகம் தங்கும் குளிர்ந்த திருப்பரங்குன்றில் விழாக்கொள்ளும் ஆரவாரம், ஒலி கொண்ட மகளிர் கூட்டம். |