99

அரவமேயன்றி  இரக்கமும்  கேடுமாகிய  குறிப்பும்  உணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : மேற்சொல்லப்பட்டனவற்றுள்,  அழுங்கல் என்னுஞ்  சொல்
இரக்கம்     என்பதன்       பொருண்மையும்,    கேடு    என்பதன்
பொருண்மையும்படும், எ-று.

உ-ம் : ‘மகவீழ்ந், தழுங்கிய’  இஃது  இரக்கம்.  ‘குளை  வழுங்கக்
குற்றமுழை நின்று கூறும் (நாலடி. 353) இதுகேடு.

நச்.

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி

இ-ள் :  அவற்றுள்   அழுங்கல்   இரக்கமும்   கேடும்   ஆகும்.
அந்நான்கனுள்   அழுங்கல்  அரவமேயன்றி  இரக்கமும்   கேடுமாகிய
குறிப்பும் உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பழங்கண் ணோட்டமும் நலிய’
‘அழுங்கின னல்லனோ அயர்ந்தனன் மனனே’  (அகம். 66)
‘குணனழுங்கக்  குற்றம்  உழைநின்று கூறும் சிறியவர்கட்கு’
(நாலடி. 353) எனவரும்.

வெள்.

(நச். உரையே)

ஆதி

பொருள் : அழுங்கல் - அழுத்துதல் - இரக்கம், கேடு, துன்பம்.

கழுமு
  

345.

கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்               (54)

(கழுமு என் கிளவி மயக்கம் செய்யும்).
  

ஆ. மொ. இல.

The word, Kaļum, gives the meaning of intermingling.

ஆல்.

Kaļum means a state of confusion.

இளம்

வ-று : 1 கழுமிய  ஞாட்பினுள் மைந்திகழ்ந்தார் இட்ட (களவழி. 11)
என்றக்கால்; மயங்கிய ஞாட்பு என்பதாம்.


1. பொருள் : பலர்  மயங்கிய  (கலந்த)  போரில்  தன்   வலியை
               யிகழ்ந்தார்  அஞ்சி  விட்டுச்  சென்ற