100

சேனா

‘கழுமிய ஞாட்பு’ (களவழி.  11) எனக்  கழும்  என்பது மயக்கமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

சேனா

இ-ள் : கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ-று..

உ-ம் : ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி. 11)

நச்.

இதுகுறிப்பு.

இ-ள் : கழுமு  என்கிளவி மயக்கம் செய்யும் கழுமு என்னும் சொல்
மயக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம்  : ‘கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தா ரிட்ட’   (களவழி. 11)
எனவரும். இது, 1 ‘கழும் முடித்துக் கண்கூடு கூழை’ (கலி. 56.3)  எனத்
திரட்சியை யுணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனால் கொள்க.

வெள்

இ-ள் : கழும் என்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘கழுமிய ஞாட்பு’ எனவரும்.

ஆதி

பொருள் :  கழு ஈட்டிமுனை மயக்கம் தரு.

செழுமை
 

346.

செழுமை வளனுங் கொழுப்பு மாகும்.             (55)

(செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Selumai’ means fertility and fat

ஆல்

Celumai means being fertile and fat

இளம்.

வ-று  :  ‘செழுஞ்  செந்நெல்’  என்றக்கால்,   வளஞ்   செந்நெல்
என்பதாம். வளம் என்பது ஆக்கம்.


1. பொருள் : பூவும்  மயிரும் தம்முள் மயங்கும்படி முடித்து, வாரி
               முடிக்கும்படித்  தலை  கூடின  மயிர்.