101

‘செழுந்தடி தின்ற செந்நாய்  ஏற்றை’  என்பது,  1கொழுந்தடி தின்ற
என்பதாம்; கொழுப்பு என்பது ஊன் பற்றிய நிணம்.

சேனா.

இ-ள் : ‘செழும்பல்  குன்றம்’ எனவும், ‘செழுந்தடி தின்ற செந்நாய்’
எனவும், செழுமை வளனும், கொழுப்புமாகிய பண்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : செழுமை  என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு
என்பதன் பொருளும்படும், எ-று.

உ-ம் : ‘செழும்பல் குன்றம்’ இது வளம். செழுந்தடி தின்ற செந்நாய்’
இது கொழுப்பு.

நச்.

இதுவுமது.

இ-ள் : செழுமை  வளனும் கொழுப்பும் ஆகும் செழுமை வளனும்
கொழுப்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்’
‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ எனவரும்.

வெள்.

இ-ள் : செழுமை   என்பது   வளனும்   கொழுப்புமாகிய  பண்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் :  ‘செழும்பல் குற்றம்’ எனவும், ‘செழுந்தடி  தின்ற செந்நாய்
ஏற்றை’ எனவும் முறையே வளமும் கொழுப்பும் உணர்த்தியது.

ஆதி

பொருள் : செழுமை - செழிப்பான - வளமான கொழுப்பான.

விழுமம்
 

347.

விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும்          (56)

(விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்)
 

ஆ. மொ. இல.

‘Vilumam’ means eminence, honour and distress.

ஆல்.

‘Vilumam’ means fame, honour and distress.


1.  பொருள் : கொழுவிய தசையைத் தின்ற ஆண் செந்நாய்.