பி. இ. நூ இல. வி. 282.7 விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் இளம் வ-று : ‘விழுமியர்’ என்றக்கால், சீரியர் என்பதாம். ‘விழும முற்றிருந்தார்’ என்றக்கால், இடும்பையுற்றிருந்தார் என்பதாம். சேனா 1 (பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாம்) இ-ள் : 2‘விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி.159) எனவும், 3வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27) எனவும், 4‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ (அகம். 170) எனவும், விழுமம் முறையானே சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய் பாடம் : விழுமம், சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும்) இ-ள் : விழுமம் என்பது சீர்மை என்பதன் பொருளும் சிறப்பு என்பதன் பொருளும் இடும்பை என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம் : ‘விழுமியோர், காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159) - இது சீர்மை.‘வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து (புறம். 27)- இது சிறப்பு. ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ (அகம். 170) இது இடும்பை. நச். (பாடம் : விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்) இதுவுமது.
1. இளம்பூரணரை யொழிந்தோர் சீர்மைக்கும் சிறப்புக்கும் வேறுபாடுண்டு எனக் கொண்டமையின் இப்படிப் பாடம் கொண்டனர். பொருள் : 2. சீரியோரைக் காணுந்தொறும் சிறப்புச் செய்வர். 3.வேறுபாடில்லாத சிறந்த குலத்திற் பிறந்து. 4. நினக்குற்ற துன்பத்தைப் போக்கினவள். |