109

1‘இயமரம் இயம்பும்’ எனவே ஒலிக்கும் என்பதாம்.
2
‘முரஞ்சிரங்கு முற்றம்’ என்றக்கால், இசைக்கும் என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘வரிவளை துவைப்ப’ எனவும், 3‘ஆமா நலலேறு சிலைப்ப’
(முருகு.  315)  எனவும்,   4கடிமரந்தடியுமோசை  தன்னூர்,  நெடுமதில்
வரைப்பிற்   கடிமனை   யியம்ப’   (புறம்.  36)  எனவும்,    5‘ஏறிரங்
கிருளுடை’   (கலி.  46)  எனவும்,   துவைத்தல்  முதலாயின  இசைப்
பொருள் உணர்த்தும், எ-று.

தெய்

இ-ள் :  துவைத்தல்  என்னும்   சொல்லும்  சிலைத்தல்  என்னும்
சொல்லும் இரங்கல்  என்னும்  சொல்லும் இயம்பல் என்னும் சொல்லும்
ஓசைப் பொருண்மையுடைய சொல், எ-று.

உ-ம் :  ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்வேறு சிலைப்ப’  ‘ஏறிரங்
கிருளுடை’,  ‘கடிமரந்   தடியுமோசை  தன்னூர் நெடுமதில்  வரைப்பிற்
கடிமனை யியம்ப.’

நச்

இஃது இசை.

இ-ள் :  துவைத்தலும்  சிலைத்தலும்    இயம்பலும்    இரங்கலும்
இசைப்பொருட்கிளவி  என்மனார்புலவர்துவைத்தல் முதலிய    நான்கும்
இசைப்  பொருளை  உணர்த்தும்  சொல்லாம் என்று   கூறுவர் புலவர்,
எ-று.

உ-ம் :‘முரசு கடிப் பிகுப்பவும். வால்வளை துவைப்பவும்’ (புறம்.158)
‘ஆமா நல்லேறு சிலைப்ப                (முருகு. 315)
‘கடிமரந்தடியு மோசை தன்னூர்,
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப,        (புறம் 36)


பொருள் : 1. வாத்தியம் ஒலிப்ப.

         2. முரஞ்சு ஒலிக்கும் முற்றம்.

         3. காட்டுப் பசுவும் ஏறும் ஒலிப்ப

         4. காவல் மரத்தை வெட்டும் ஓசை தன் ஊரில்
               நெடுமதிலகத்துள்ள அரண்மனைக் கண் ஒலிக்க.

         5. ஆனேறு ஒலிக்கும் இருளில்