111

கழிந்த  பொருள்  பற்றி  வரும்  கவலையைக்   கழிந்த  பொருள்
என்றார்.

தெய் :

இ-ள் : மேற் சொல்லப்பட்டவற்றுள்  இரங்கல்  என்பது  கழிந்தது
என்னும் பொருளையும் உடைத்தாகும், எ-று.

உ-ம் : ‘செய்திரங்கா வினை’                       (புறம் 10)

நச்.

இஃது எய்தியதன் மேற்சிறப்பு விதி.

இ-ள் :  அவற்றுள்   இரங்கல்   கழிந்த   பொருட்டும்   ஆகும்
அந்நான்கனுள்  இரங்கல்  இசையே  யன்றி ஒரு பொருளது  கழிவால்
பிறந்த வருத்தமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘செய்திரங்கா வினைச்,சேண் விளங்கும் புகழ்’ (புறம் 10, 11)
என வரும். இஃது

‘இனி  நினைந் திரக்க மாகின்று’ (புறம் 243) என இரக்கம் எனவும்
நிற்கும்.

வெள்.

இ-ள் : மேற்குறித்த  உரிச் சொற்களுள் இரங்கல் என்பது இசையே
யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.

கழிந்த பொருள்பற்றி  வரும் கவலையைக்  கழிந்த பொருள்  எனக்
குறித்தார்.

உ-ம் : ‘செய்திரங்கா வினை’ எனவரும்.

ஆதி.

பொருள் :இரங்கல் - இரக்கப்படல் - ஒலிக்குறிப்பு.

இலம்பாடு, ஒற்கம்
 

354.

இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை.            (63)

(இலம்பாடு ஒற்கம் ஆ இரண்டும் வறுமை).
 

ஆ. மொ. இல.

‘Ilambādu’ and ‘oŗkam’ these two denote poverty.

ஆல்.

The two ‘ilampātu’ and ‘oŗkam’ mean poverty.

இளம்.

வ-று :  ‘இலம்படு   புலவர்’  (மலைபடு.   576)    என்றக்கால்,
வறுமைப்படும்   புலவர்   என்பதாம்.    ‘ஊரை   ஒற்கம்  தீர்க்கும்’
என்றக்கால் வறுமை தீர்க்கும் புலவர் என்பதாம்.