44தொல்காப்பியம் - உரைவளம்

இ-ள் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி’  எனவும், ‘இரவரல்  மாலையனே’
(குறிஞ்சி.  239)  எனவும்,  சீர்த்தியும்  மாலையும்,  பெரும்  புகழும்
இயல்புமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்

இ-ள் : மாலையென்னும் சொல் இயல்பு என்னும் பொருள்படும்,
எ-று,

உ-ம் : 1 ‘குறிப்பேவல்  செயல் மாலைக் கொளை நடையந்தணீர்’ (கலி. 9)

நச்

(சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே)

இதுவுமது;

இ-ள் : சீர்த்தி மிகுபுகழ்மாலை இயல்பேசீர்த்தி மிகுபுகழும் மாலை
இயல்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி.’
          ‘இரவரல் மாலையனே’ (குறிஞ்சிப். 239)

என வரும்.

வெள்

(சீர்த்தி மிகுபுகழ் மாலையியல்பே)

இ-ள் :சீர்த்தி    என்னுஞ்சொல்     பெரும்புகழ்    என்னும்
குறிப்புணர்த்தும்;   மாலை   யென்னுஞ்   சொல்  இயல்பு  என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘வயக்கஞ்சால் சீர்த்தி’  எனவும், ‘இரவரல்  மாலையனே
எனவும்,  சீர்த்தி மாலை என்னும் சொற்கள் முறையே பெரும் புகழும்
இயல்பும் ஆகிய குறிப்புணர்த்தின.

ஆதி

உ-ம் : சீர்த்தி - சிறப்பு - மிக்கபுகழ்
          மாலை-பொழுது, பூமாலை-வரிசை, இயல்பு.


1. பொருள் : ஐம்   பொறியும்    நுமக்கு    ஏவல்   செய்தலை
இயல்பாகவுடைய  கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும்
உடைய அந்தணீர்.