48தொல்காப்பியம் - உரைவளம்

உ-ம் : ‘கதழ்பரி   நெடுந்தேர்’   (நற். 203),  ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ (அகம். 9)

நச்

இதுவுமது.

இ-ள் : கதழ்வும்  துனைவும்  விரைவின்  பொருள - கதழ்வும் துனைவும் விரைவு என்னும் சொல்லினது குறிப்புடைய, எ-று.

உ-ம் :அண்டர்,
          ‘கயிறரி யெருத்தின் கதழுந் துறைவன்’ (குறுந். 117)
          ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ (அகம். 9)

எனவரும்.

வெள்.

இ-ள் : கதழ்வு  துனைவு  என்னும்   உரிச்சொற்கள்   இரண்டும்
விரைவாகிய குறிப்பினைப் பொருளாக வுடையன, எ-று.

உ-ம் :‘கதழ்புரி    நெடுந்தேர்’  எனவும்,  ‘துனைபரி  நிவக்கும்
புள்ளின்மான’   எனவும்   கதழ்வும்   துனைவும்    விரைவென்னும்
குறிப்புணர்த்தின.

ஆதி

உ-ம் : கதழ்வு............. .................. விரைவான

அதிர்வு, விதிர்ப்பு
 

310.

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.            (19)

(அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்)
 

ஆ.மொ.இல.

‘Athirvu’ and ‘Vithirpu’ mean trembling

ஆல்.:

‘Atirvu’ and ‘Vitirppu’ mean trembling

பி. இ. நூ.

இல. வி. 2818

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்தலும்

முத்து ஒ. 38

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கப் பொருள.