52தொல்காப்பியம் - உரைவளம்

‘போகு கொடி மருங்குல்’
1
‘திரிகாய் விடத்தரொடு காருடைபோகி’ (பதிற். 13)

எனவும்,

‘ஒழுகு கொடி மருங்குல்‘
‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண். 21)

எனவும் வரும்.

வெள்.

இ-ள் : வார்தல் போகல் ஒழுகல்   என்னும்  மூன்று  சொல்லும்
நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ எனவும், ‘வார்கயிற்றொழுகை’
எனவும்,   வார்தல்   என்னும்   உரிச்சொல்  முறையே  நேர்மையும்
நெடுமையும்   உணர்த்தியது.   ‘போகு  கொடி  மருங்குல்’  எனவும்,
‘வெள்வேல்  விடத்தரோடு  காருடைபோகி’ எனவும் போகல் என்னும்
உரிச்சொல்   முறையே   நேர்மையும்   நெடுமையும்  உணர்த்தியது.
‘ஒழுகுகொடி   மருங்குல்’  எனவும்,  ‘மால்வரை  யொழுகிய  வாழை’
எனவும்   ஒழுகல்   என்னும்   உரிச்சொல்  முறையே  நேர்மையும்
நெடுமையும் உணர்த்தியது.

ஆதி.

உ-ம் : வார்தல்-தலை வாருதல்-நீண்ட (வார்சிலை)
          போகல்-போகுதல்-நீளுதல்
          ஒழுகல்-ஒழுக்க-முறைநீளம்
 

தீர்தல், தீர்த்தல்
 

312.

தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்           (21)

(தீர்தலும் தீர்த்தலும் விடல்பொருட்டு ஆகும்)
 

ஆ.மொ.இல.

‘Thīrthal’ and ‘thīrththal’ mean separation
      and being separated respectively.

ஆல்.

‘Tīrtal’ and ‘Tīrttal’ mean separation.

பி. இ. நூ.

முத்து. ஒ. 39

தீர்தல் தீர்த்தல் விடற்பெயர்க் கிளவி


1. வெள்வேல்  விடத்தரொடு எனவும் பாடம். திரிகாய்... போகி =
  முறுக்கிய காயுடைய விடத்தர் மரத்துடனே கரிய  உடைமரமும்
  நீண்டு.