64தொல்காப்பியம் - உரைவளம்

உ-ம் : 1‘மயிற் சாயல் மகள் வேண்டிய’
           ‘சாயல் மார்பு. நனியலைத் தன்றே’  (பதிற்.  16)

என  இவை2  ஒளியானும் ஊற்றானும் பிறந்த மென்மை உணர்த்தின.

‘அமிர்தன்ன சாயல்’  (சீவக.8)

என்பது  தன்னை  நுகர்ந்தார்  பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையை
யுணர்த்தவே3 பல மென்மையும் அடங்கின. ஒழிந்தன வந்துழிக் காண்க.

வெள்.

இ-ள் : (320ல் காண்க.)

ஆதி

பொருள் : சாயல் தோற்றம் மெல்லிய.

முழுது
 

320.
 

முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே           (29)

(முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே)
 

ஆ. மொ. இல.

‘Muluthu’ means completeness.

ஆல்.

‘Mulutu’ means being complete

இளம்.

வ-று : ‘முழுக்கறை  பெய்தான்’  என்றக்கால் எஞ்சாமை பெய்தான்
என்பதாம்.

சேனா.

(318, 319, 320 ஆம் சூத்திரங்களின் உரை)


1. பொருள் : மயில் போலும் ஒளியால் மென்மையுடைய மகள். 
               மென்மையான மார்பு மிக அலைந்தது.

2. மயிற்சாயல்  என்பதில் மயிலின் ஒளி மென்மையும் சாயல் மார்பு
     என்பதில் தொடுவுணர்ச்சி மென்மையும் உணர்த்தியது காண்க.

3. பல மென்மையாவன ஐம்பொறி நுகர்வுக்காகும் மென்மைகள்.