65

 இ-ள் :  ‘பழுது கழி  வாழ்நாள்’, ‘சாயல் மார்பு’, மண்முழுதாண்ட
எனப்  பழுது முதலாயின பயமின்மையாகிய  குறிப்பும் மென்மையாகிய
பண்பும் எஞ்சாமையாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள்: முழுது  என்னுஞ்சொல்  ஒழியாமையை  உணர்த்தும், எ-று.

உ-ம்: உலக முழுதாண்ட                    (சிலப். அந்தி 1.)

நச்.

இது குறிப்பு.

இ-ள் .  முழுது என் கிளவி  எஞ்சாப் பொருட்டேமுழுது என்னும்
சொல் எஞ்சாமையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் :  ‘மண் முழுதாண்ட நின் முன்னோர் போல’ என வரும்.

வெள்.

(சூ. 318, 319, 320ன் உரை).

இ-ள் :  பழுது   என்னும்   சொல்  பயனின்மையாகிய   குறிப்பு
உணர்த்தும்,  சாயல்  என்னும் சொல் மென்மையாகிய பண்புணர்த்தும்;
முழுது என்னும் சொல் எஞ்சாமையாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பழுது  கழி  வாழ்நாள்’ எனவும், ‘சாயல்  மார்பு’ எனவும்
‘மண்முழுதாண்ட’    எனவும்  அவை    முறையே   பயனின்மையும்,
மென்மையும்,  எஞ்சாமையும் உணர்த்தின.  பயனின்மையைக் குறிக்கும்
பழுது  என்னுஞ்  சொல்  குற்றத்தை  யுணர்த்துதலை  உலக வழக்கிற்
காண்க.

ஆதி.

பொருள் : முழுது - முற்றும் - மீதியின்றி, குறைவின்றி.

வம்பு
 

321.

வம்பு நிலையின்மை.                           (30)
 

ஆ. மொ. இல.

‘Vambu’ means uncertainty

ஆல்.

‘Vambu’ means uncertain