68தொல்காப்பியம் - உரைவளம்

யுறையும்’  (மலைபடு. 82) என்றக்கால்,  நயந்து  உறையும் என்பதாம்.

சேனா.

(சூ. 321, 322, 323ன் உரை)

இ-ள்: ‘வம்புமாரி’ (குறுந். 66), ‘மாதர் நோக்கு’ (அகம் 130),‘நயந்து
நாம்  விட்ட  நன்மொழி  நம்பி’  (அகம்.  198) 1பேரிசை  நவிர மேஎ
யுறையும்’  (மலைபடு  82)  என  வம்பும்   மாதரும்  நிலையின்மையும்
காதலுமாகிய     குறிப்புணர்த்தும்;    நம்பும்   மேவும்    நசையாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

மே - நசையாக

தெய்.

இ-ள் : நம்பு  என்னும் சொல்லும்  மேவு என்னும் சொல்லும் நசை
என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் .  ‘நயந்து  நாம்  விட்ட  நன்மொழி  நம்பி’ (அகம், 198 )
‘பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு. 82).

நச்:

இதுவுமது

இ-ள் : நம்பும் மேவும்  நசை  ஆகும்மே  நம்பும்  மேவும்  நசை
என்னும் குறிப்பினை உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நயந்து நாம் விட்ட நன் மாழிநம்பி’     ( அகம்.. 198 )

எனவும்,

‘பேரிசை நவிரம் மேஎய் உறையும்
காரி யுண்டி’                           (மலைபடு. 82 )

எனவும் வரும்.

வெள்

(321, 322, 323 ன் உரை )

இ-ள் :  வம்பு  என்னும்   உரிச்சொல்   நிலையின்மை   என்னும்
குறிப்புணர்த்தும்;    மாதர்    என்னும்    சொல்   காதல்   என்னும்
குறிப்புணர்த்தும்;  நம்பு,  மேவு  என்பன   இரண்டும்  நசை  என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.


1. பொருள் : பெரிய புகழையுடைய நவிரம் என்னும் மலையைப்
          பொருந்தியுறையும்