69

உ-ம் :  ‘வம்பு மாரி’ எனவும், ‘மாதர் நோக்கு’ எனவும்,‘நயந்துநாம்
விட்ட  நன்மொழி  நம்பி’  எனவும்,  பேரிசை  நவிர மேஎ  யுறையும்’
எனவும் வரும்.

ஆதி.

பொருள் :நம்பு-விசுவாசி- விரும்புகிற
மேவு- முன்வரு-விழையும்

ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாய்.
 

324.

ஓய்த லாய்த னிழத்தல் சாஅ
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம்                (33)

(ஓய்தல் ஆய்தல் நிழத்தல், சா அய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்)
 

ஆ. மொ. இல.

‘ōythal’ Āythal’, ‘nilaththal’ and ‘sāy’ - these
      four indicate decrease

ஆல்

The four ‘ōytal’, ‘Āytal’, ‘Nilathal’, Caay mean
getting reduced.

பி .இ .நூ.

இல. வி. 281 11, 12

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாய்தல்
உள்ளதன் நுணுக்கம் உணரக் காட்டலும்

இளம்

வ-று: ‘ஓய்கலை  யொருத்தல்’  என்றக்கால்,   நுணுகிய  கலை
யொருத்தல் என்பதாம்.

‘கையும்  மெய்யும் ஆய்ந்திருந்தார்’ என்றக்கால்,  சுருங்கியிருந்தார்
என்பதாம்.

‘நிழத்த  யானை  மேய்புலம்  படர’ (மதுரைக்.  303)  என்றக்கால்,
மெலிந்து நுணுகிய என்பதாம்.

1‘கயலற லெதிரக்  கடும்புனற் சாஅய்’  (நெடுநல்.  18)  என்றக்கால்,
சுருங்கி என்பதாம்.


1.பொருள் : மீன்கள் யாவும் கருமணலை எதிர்த்துச் செல்லுமாறு
              மிக்க நீர்சுருங்கி.