72தொல்காப்பியம் - உரைவளம்

சேனா

இ-ள் : (325, 326, 327, 328 ஆகிய எண்களுள்ள சூத்திரங்களுக்குச்
சேர்த்து 328ல்  உரை காண்க)

தெய்

இ-ள் : புலம்பு என்னும் சொல் தனிமை என்னும்  பொருள் படும்,
எ-று.

உ-ம் :1 ‘புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’         (அகம்5)

நச்

இதுவுமது

இ-ள் :  புலம்பே  தனிமை  புலம்பு  தனிமை  என்னும்   குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி’  (அகம்.  5)  என
வரும்.

2‘தமி’ என்பது சொற் புறனடையாற் கொள்க.

வெள்

இ-ள் :(325, 326, 327, 328 ஆகிய எண்களுள்ள சூத்திரங்களுக்குச்
சேர்த்து 328ல் உரை காண்க)

ஆதி

பொருள் : புலம்பு-அழு-தனிமை.

துவன்று
 

326.

துவன்று நிறை வாகும்                          (35)

(துவன்று நிறைவு ஆகும்)
 

ஆ.மொ. இல.

‘Thuvanru’ means fullness

ஆல்.

‘Tuvanŗu means fullness.


1. பொருள் : புலிப்பல் கோர்க்கப்பட்ட தனிமையான அழகிய தாலி.

2. தனிமைப்   பொருள்   தரும்   ‘தமி’   என்பதைப்  புறனடைச்
     சூத்திரத்தாற்  கொள்க.  (உரி.  92). சொற் புறனடை  உரிச்சொல்
     பற்றிய புறனடை.