75

இளம்.

வ-று : ‘நீ   வெம்மையள்’  என்றக்கால்,   நீ   வேண்டப்படுவாள்
என்பதாம்.

சேனா

(சூ. 325, 326, 327, 328ன் உரை.)

இ-ள் : ‘புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி’  (அகம்.7) எனவும்,
‘ஆரியர்   துவன்றிய   பேரிசை  முள்ளூர்’  (நற்.  170)   எனவும், 1
‘சூல்முரஞ் செழிலி’ எனவும், ‘வெங்காமம் (அகம். 15)  எனவும் புலம்பு
முதலாயின    தனிமையும்    நிறைவும்    முதிர்வுமாகிய   குறிப்பும்
விரும்புதலாகிய பண்பும் உணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள்: வெம்மை  என்னும்   சொல்   ‘வேண்டல்’   என்பதன்
பொருள்படும், எ-று.

உ-ம் :‘நீ வெய்யோ ளொடு’    (அகம். 6).

நச்.

இது பண்பு.

இ-ள் :வெம்மை வேண்டல்  வெம்மை  விரும்புதலாகிய  பண்பை
யுணர்த்தும், எ-று.

உ-ம் : 2‘எம்  வெங்காமம்    இயைவ  தாயினும்’  (அகம்.  15)
எனவரும்.  இது, 3 ‘குழைமாண் ஒள்ளிழை நீ வெய்யோளொடு’  எனத்
திரிந்தும் நிற்கும். 4 வெம்மை வெப்பம் உணர்த்துதல் வழக்கு.

வெள்

(சூ. 325, 326, 327, 328ன் உரை).

இ-ள் : புலம்பு   என்னுஞ்   சொல்  தனிமை  என்னும்  குறிப்பு
உணர்த்தும்; துவன்று என்னுஞ் சொல் நிறைவு என்னும் குறிப்பு


1. சூல் முரஞ்சு எழிலிசூல் முதிர்ந்த மேகம். வெம்காமம் விரும்பும்
     காமம்.

2. பொருள் : எம்மால்        விரும்பப்படும்         காமம்
               நிறைவுறுவதாயினும்.

3. பொருள் : காதணியையும்    மாட்சிப்பட்ட   அழகிய   பிற
               அணிகளயும் உடைய   நீ விரும்பியவளுடன்.

4. பொருள் : வெம்மை  என்னும் சொல் வெப்பம் எனும் பொருள்
                உணர்த்துதல் உலக   வழக்கு.