78தொல்காப்பியம் - உரைவளம்

ஏற்றம்
 
 

331.

1ஏற்ற நினைவுஞ் துணிவு மாகும்                (40)

(ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Ēŗŗam’ means remembrance and determination.

ஆல்.

Eŗŗam means remembering and determination.

பி. இ. நூ.

இல. வி. 2821

ஏற்றம் நினைவும் துணிவு இயம்பலும்

இளம்

வ-று : ‘ஏற்றத்திருந்தார்’ என்றக்கால்,நினைத்திருந்தார் என்பதூஉம்,
துணிந்திருந்தார்  என்பதூஉம் ஆம்.

சேனா

(சூ. 329, 330, 331ன் உரை)

இ-ள் :  ‘பெருவரை  யடுக்கம் பொற்ப  (நற். 34) எனவும், வறிது
வடக்கிறைஞ்சிய’    (பதிற்.    24)    எனவும்,    ‘கானலஞ்சேர்ப்பன்
கொடுமையேற்றி   (குறுந்.   145), ‘எற்றேற்ற   மில்லாருள்   யானேற்ற
மில்லாதேன்’  எனவும்,  பொற்பு முதலாயின  முறையானே  பொலிவும்,
சிறிது  என்பதூஉம்,  நினைவும்  துணிவுமாகிய குறிப்பும்   உணர்த்தும்,
எ-று.

தெய்

இ-ள் :  ஏற்றம் என்னும்  சொல்  நினைவு  துணிவு  என்பவற்றின்
பொருள்படும், எ-று.

உ-ம் :  ‘கானலஞ்  சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145) இது
நினைவு. ஏற்றென் றிரங்குவ செய்யற்க’ (குறள்; 655) இது துணிவு.

நச்

இதுவுமது.


1. எற்ற நச். பாடம்.