இ-ள் : எற்றம் நினைவும் துணிவும் ஆகும் எற்றம் நினைவும் துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145) 1 ‘எற்றமி லாட்டியென் ஏமுற்றாள்’ (கலி. 144) எனவரும். வெள் (சூ. 329, 330, 331ன் உரை) இ-ள் : பொற்பு என்னுஞ் சொல் பொலிவு என்னும் குறிப்பு உணர்த்தும்; வறிது என்னுஞ் சொல் சிறிது என்னும் குறிப்பு உணர்த்தும்; ஏற்றம் என்னும் சொல் நினைவும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ எனவும், ‘வறிதுவடக் கிறைஞ்சிய’ எனவும், ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ எனவும், ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ எனவும் பொற்பு பொலிவு என்னும் குறிப்பிலும், வறிது சிறிது என்னும் குறிப்பிலும், ஏற்றி-நினைந்து, ஏற்றம்-துணிவு என்னும் குறிப்பிலும் வந்தவாறு காண்க. ஆதி. பொருள் :ஏற்றம்-துலா, முன்னேற்றம்-நினைவு, துணிவு. குறிப்பு : ஏற்றம், எற்றம் என்பன நினைவு துணிவு எனும் இரண்டு பொருளுக்கும் உரியவாக வேறுபாடின்றி ஆளப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியர் நீங்கலாக மற்றையோர் ஏற்றம் என்ற பாடமே கொண்டனர் பிணை, பேண் |