80தொல்காப்பியம் - உரைவளம்

இளம்

உரை : பெட்டல் என்பது புறந்தருதல், எ-று.

வ-று : 1‘அரும்பிணை பயக்கற்ற வேட்ட ஞான்று’

என்றக்கால், அரும்  புறந்தரு வரவிற்றாகி  வேட்டபோழ்து  என்பதாம்.

2‘பேணின   னல்லனோ    மகிழ்ந’    (அகம்.  16)   என்றக்கால்,
பெட்டேனல்லனோ மகிழ்ந என்பதாம்.

சேனா

இ-ள் : ‘அரும்பிணை  யகற்றி  வேட்ட   ஞாட்பினும்’    எனவும்,
‘அமரர்ப்   பேணியும்   ஆகுதி   யருத்தியும்’  (புறம்.  99)   எனவும்
பிணையும்  பேணும்  பெட்பின்  பொருளாகிய   புறந்தருதல்  என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

‘பெட்பின்   பொருள’  வென்றதனால்,   பெட்பின்   பொருளாகிய
விரும்புதலுணர்த்தலும் கொள்க. 3 அது வந்த  வழிக்கண்டு  கொள்க.

தெய்.

இ-ள் : பிணை  என்னும்  சொல்லும்  பேண்  என்னும்  சொல்லும்
பெட்பு என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம்  : ‘அரும்பிணை  யகற்றி வேட்ட  ஞாட்பினும்’,   அமரர்ப்
பேணியும் ஆகுதி யருத்தியும்’                         (புறம். 99).

நச்.

இது குறிப்பும் பண்பும் உணர்த்துகின்றது.

இ-ள் : பிணையும் பேணும் பெட்பின் பொருள  பிணையும் பேணும்
பெட்பு என்னும் உரிச்சொல்லினது பொருளையுடையவாம், எ-று.


1. இ்ப்பகுதி    விளக்கமில்லை.    ‘அரும்பிணை   யகற்றிவேட்ட
     ஞாட்பினும் என்பதே  நன்று. “அரிய  பாதுகாவலைப்  பெருக்கி
     வெள்ளி செய்த  காலத்தும்”  என்பது  பொருள்.

2. பொருள் : பாதுகாத்தேன் அல்லனனோ மகிழ்ந.

3. ‘அமரர்ப்பேணி’ என்பதில் விருப்பம் எனும் பொருள் இருப்பதாக
      நச்சினார்க்கினியர் கூறுவர் காண்க.