251 | | குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி | | நுண் பல் அழி துளி பொழியும் நாட! | | நெடு வரைப் படப்பை நும் ஊர்க் | | கடு வரல் அருவி காணினும் அழுமே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 | | |
|
|
252 | | குன்றக் குறவன் புல் வேய் குரம்பை | | மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் | | புரையோன் வாழி, தோழி! விரை பெயல் | | அரும் பனி அளைஇய கூதிர்ப் | 5 | பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்துக்கு முன்னே வந்தானாக, உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 2 | | |
|
|
253 | | குன்றக் குறவன் சாந்த நறும் புகை | | தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும் | | கானக நாடன் வரையின், | | மன்றலும் உடையள்கொல் தோழி! யாயே? | |
| 'வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான்' என்பது தோழி கூறக் கேட்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 3 | | |
|
|
254 | | குன்றக் குறவன் ஆரம் அறுத்தென, | | நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் | | வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்! | | கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே. | |
| உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4 | | |
|
|
255 | | குன்றக் குறவன் காதல் மட மகள் | | வரையர மகளிர்ப் புரையும் சாயலள்; | | ஐயள்; அரும்பிய முலையள்; | | செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே. | |
| 'நின்னால் காணப்பட்டவள் எத்தன்மையள்?' என்ற பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 5 | | |
|
|
256 | | குன்றக் குறவன் காதல் மட மகள் | | வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி; | | வளையள்; முளை வாள் எயிற்றள்; | | இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே. | |
| 'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6 | | |
|
|
257 | | குன்றக் குறவன் கடவுள் பேணி, | | இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள் | | ஆய் அரி நெடுங் கண் கலிழ, | | சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே. | |
| 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7 | | |
|
|
258 | | குன்றக் குறவன் காதல் மட மகள் | | அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப் | | பெரு வரை நாடன் வரையும் ஆயின், | | கொடுத்தனெம் ஆயினோ நன்றே | 5 | இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே. | |
| வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு ப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8 | | |
|
|
259 | | குன்ற குறவன் காதல் மட மகள் | | மன்ற வேங்கை மலர் சில கொண்டு, | | மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி, | | தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்; | 5 | மலர்ந்த காந்தள் நாறிக் | | கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே. | |
| வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9 | | |
|
|
260 | | குன்றக் குறவன் காதல் மட மகள், | | மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல | | பைம் புறப் படு கிளி ஓப்பலர்; | | புன்புல மயக்கத்து விளைந்தன தினையே! | |
| பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10 | | |
|
|