291 | | மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் | | துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள், | | ஆய் தழை நுடங்கும் அல்குல், | | காதலி உறையும் நனி நல் ஊரே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. 1 | | |
|
|
292 | | மயில்கள் ஆல, பெருந் தேன் இமிர, | | தண் மழை தழீஇய மா மலை நாட! | | நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து | | நல் மனை அருங் கடி அயர, | 5 | எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே. | |
| பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி, தலைமகள் உவந்து சொல்லியது. 2 | | |
|
|
293 | | சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன | | நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! | | பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள் | | தோகை மாட்சிய மடந்தை! | 5 | நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே? | |
| பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3 | | |
|
|
294 | | எரி மருள் வேங்கை இருந்த தோகை | | இழை அணி மடந்தையின் தோன்றும் நாட! | | இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்! | | நல் மனை வதுவை அயர, இவள் | 5 | பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே! | |
| வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4 | | |
|
|
295 | | வருவதுகொல்லோ தானே வாராது | | அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ | | புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை, | | இருவி இருந்த குருவி வருந்துற, | 5 | பந்து ஆடு மகளிரின் படர்தரும் | | குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே? | | தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5 | | |
|
|
296 | | கொடிச்சி காக்கும் பெருங் குரல் ஏனல் | | அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட! | | நடுநாள் கங்குலும் வருதி; | | கடு மா தாக்கின், அறியேன் யானே. | | இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. 6 | | |
|
|
297 | | விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை | | பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட! | | பிரியினும், பிரிவது அன்றே | | நின்னொடு மேய மடந்தை நட்பே. | | ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7 | | |
|
|
298 | | மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் | | அடுக்கல் நல் ஊர் அசைநடைக் கொடிச்சி | | தான் எம் அருளாள்ஆயினும், | | யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே! | | தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்து ஒழுகிய அதனைக் கூறக்கேட்ட தலைமகன் சொல்லியது. 8 | | |
|
|
299 | | குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன், | | பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் | | அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி | | கண்போல் மலர்தலும் அரிது; இவள் | 5 | தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. | | இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9 | | |
|
|
300 | | கொடிச்சி கூந்தல் போலத் தோகை | | அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன் | | வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே; | | அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே! | | தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது. | | |
|
|