301 | | மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர், | | அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும் | | அவ் வரை இறக்குவை ஆயின், | | மை வரை நாட! வருந்துவள் பெரிதே. | |
| பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1 | | |
|
|
302 | | அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே; | | பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்; | | செல்லாய் ஆயினோ நன்றே | | மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே. | |
| பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2 | | |
|
|
303 | | புதுக் கலத்தன்ன கனிய ஆலம் | | போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம் | | தண்ணிய இனிய ஆக; | | எம்மொடும் சென்மோ, விடலை! நீயே. | |
| சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3 | | |
|
|
304 | | கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய | | ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும் | | கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல் | | புயல் நெடுங்கூந்தல் புலம்பும்; | 5 | வய மான் தோன்றல்! வல்லாதீமே. | |
| பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4 | | |
|
|
305 | | களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது, | | பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து, | | சுடர்த் தொடிக் குறுமகள் இனைய, | | எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே? | |
| 'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5 | | |
|
|
306 | | வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின், | | பல் காழ் அல்குல் அவ் வரி வாட, | | குழலினும் இனைகுவள் பெரிதே | | விழவு ஒலி கூந்தல் மாஅயோளே. | |
| பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6 | | |
|
|
307 | | ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம் | | குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே; | | நன்று இல, கொண்க! நின் பொருளே | | பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே. | |
| பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7 | | |
|
|
308 | | பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின் | | பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க் | | கால் எறுழ் ஒள் வீ தாஅய | | முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே. | |
| 'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8 | | |
|
|
309 | | வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து | | செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும் | | நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன் | | முறுவல் காண்டலின், இனிதோ | 5 | இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே? | |
| 'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9 | | |
|
|
310 | | பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல், | | இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப் | | பிரிதல் வல்லுவைஆயின், | | அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே! | |
| பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10 | | |
|
|