31 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் | | முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை | | உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே? | |
| முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது. | | |
|
|
32 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள் | | அழுப என்ப, அவன் பெண்டிர் | | தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. | |
| வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
33 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை, | | பெண்டிரொடு ஆடும் என்ப தன் | | தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. | |
|
|
|
34 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் | | பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல் | | தாது ஏர் வண்ணம் கொண்டன | | ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே. | |
|
|
|
35 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் | | பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் | | நிறத்தினும் நிழற்றுதல் மன்னே; | | இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே. | |
| வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 | | |
|
|
36 | | அம்ம வாழி, தோழி! ஊரன் | | நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து | | உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே | | கயல் எனக் கருதிய உண் கண் | 5 | பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே. | |
| தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6 | | |
|
|
37 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க | | வல்லன் வல்லன் பொய்த்தல்; | | தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே. | |
| தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7 | | |
|
|
38 | | அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் | | தண் தளிர் வௌவும் மேனி, | | ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே. | |
| தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8 | | |
|
|
39 | | அம்ம வாழி, தோழி! ஊரன் | | வெம் முலை அடைய முயங்கி, நம் வயின் | | திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ, | | பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே. | |
| ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது. | | |
|
|
40 | | 'அம்ம வாழி, தோழி! மகிழ்நன் | | ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன் | | பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப | | கெண்டை பாய்தர அவிழ்ந்த | 5 | வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. | |
| உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது | | |
|
|