341 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | குயில் பெடை இன் குரல் அகவ, | | அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே! | | தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது. | |
| இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும். | | |
|
|
342 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | சுரும்பு களித்து ஆலும் இருஞ் சினைக் | |
| கருங் கால் நுணவம் கமழும் பொழுதே! 2 | | |
|
|
343 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | திணி நிலைக் கோங்கம் பயந்த | |
| அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3 | | |
|
|
344 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | நறும் பூங் குரவம் பயந்த | |
| செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4 | | |
|
|
345 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | புதுப் பூ அதிரல் தாஅய்க் | |
| கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே! 5 | | |
|
|
346 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | அம் சினைப் பாதிரி அலர்ந்தென, | |
| செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6 | | |
|
|
347 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | எழில் தகை இள முலை பொலியப் | |
| பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே! 7 | | |
|
|
348 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம் | |
| மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8 | | |
|
|
349 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | பொரி கால் மாஞ் சினை புதைய | |
| எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9 | | |
|
|
350 | | அவரோ வாரார்; தான் வந்தன்றே | | வேம்பின் ஒண் பூ உறைப்ப, | |
| தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே! 10 | | |
|
|