441 | | ஐய ஆயின, செய்யோள் கிளவி; | | கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென, | | நோய் நன்கு செய்தன எமக்கே; | | யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. | |
| சென்ற வினை முடியாமையின், கார்காலம் வந்த இடத்து, மீளப் பெறாத தலைமகன்,தலைமகள் உழைநின்றும் வந்த தூதர் வார்த்தை கேட்டு, இரங்கியது. 1 | | |
|
|
442 | | பெருஞ் சின வேந்தன் அருந் தொழில் தணியின், | | விருந்து நனி பெறுதலும் உரியள்மாதோ | | இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து | | அருந்ததி அனைய கற்பின், | 5 | குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே. | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடியாமையின், பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொல்லியது. 2 | | |
|
|
443 | | நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று, | | இலங்கு நிலவின் இளம் பிறை போலக் | | காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல் | | விண் உயர் அரண் பல வௌவிய | 5 | மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே. | |
|
|
|
444 | | பெருந் தோள் மடவரல் காண்குவெம் தில்ல | | நீள் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து | | வைந் நுதி மழுகிய தடங் கோட்டு யானை, | | வென் வேல், வேந்தன் பகை தணிந்து, | 5 | இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே. | |
|
|
|
445 | | புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத் | | துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர் | | நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை | | உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்! | 5 | வல்லே எம்மையும் வர இழைத்தனையே! | |
| பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5 | | |
|
|
446 | | முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள | | நல்ல காண்குவம், மாஅயோயே! | | பாசறை அருந் தொழில் உதவி, நம் | | காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே. | |
| பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6 | | |
|
|
447 | | பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே! | | பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை, | | ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப, | | பாடு சான்ற; காண்கம், வாணுதலே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7 | | |
|
|
448 | | தழங்குரல் முரசம் காலை இயம்ப, | | கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே; | | மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப் | | பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே; | 5 | அம் சில் ஓதியை உள்ளுதொறும், | | துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே. | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8 | | |
|
|
449 | | முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு | | பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து, | | திண்ணிதின் மாண்டன்று தேரே; | | ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே. | |
| பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண் | | |
|
|
450 | | முரசு மாறு இரட்டும் அருந் தொழில் பகை தணிந்து | | நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்; | | வெய்ய உயிர்க்கும் நோய் தணிய, | | செய்யோள் இளமுலைப் படீஇயர், என் கண்ணே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து, தன் மனக்கருத்து த்தது. 10 | | |
|
|