51 | | நீர் உறை கோழி நீலச் சேவல் | | கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! | | புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் | | மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. | |
| வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 | | |
|
|
52 | | வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச் | | செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண் | | செவ் வாய்க் குறுமகள் இனைய; | | எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே? | |
| வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2 | | |
|
|
53 | | துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே? | | சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் | | கழனித் தாமரை மலரும் | | பழன ஊர! நீ உற்ற சூளே. | |
| தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ் | | |
|
|
54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |
|
|
55 | | கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், | | தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள் | | நல் அணி நயந்து நீ துறத்தலின், | | பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. | | வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
56 | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |
|
|
57 | | பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின் | | ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன | | இவள் நலம் புலம்பப் பிரிய, | | அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே? | | தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7 | | |
|
|
58 | | விண்டு அன்ன வெண்ணெல் போர்வின், | | கை வண் விராஅன், இருப்பை அன்ன | | இவள் அணங்குற்றனை போறி; | | பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! | | உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
59 | | கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற, | | மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர | | நினக்கு மருந்து ஆகிய யான், இனி, | | இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே. | | தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9 | | |
|
|
60 | | பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும் | | கழனி ஊர! நின் மொழிவல்: என்றும் | | துஞ்சு மனை நெடு நகர் வருதி; | | அஞ்சாயோ, இவள் தந்தை கை வேலே? | | வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது. 10 | | |
|
|