61 | | நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் | | நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம், | | கை வண் மத்தி, கழாஅர் அன்ன | | நல்லோர் நல்லோர் நாடி, | 5 | வதுவை அயர விரும்புதி நீயே. | |
| 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' | | |
|
|
62 | | இந்திர விழவில் பூவின் அன்ன | | புன் தலைப் பேடை வரி நிழல் அகவும் | | இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி | | எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே? | |
|
|
|
63 | | பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய் | | வாளை நாள் இரை பெறூஉம் ஊர! | | எம் நலம் தொலைவது ஆயினும் | | துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே. | |
| பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3 | | |
|
|
64 | | அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ | | நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர் | | ஒருவரும் இருவரும் அல்லர்; | | பலரே தெய்ய; எம் மறையாதீமே. | |
| தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4 | | |
|
|
65 | | கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் | | சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர! | | புதல்வனை ஈன்ற எம் மேனி | | முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே. | |
| ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
66 | | உடலினென் அல்லேன்; பொய்யாது மோ: | | யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு, | | தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின் | | வள மனை வருதலும் வௌவியோளே? | |
| புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி, வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது. 6 | | |
|
|
67 | | மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே | | 'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் | | பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த் | | தாது உண் வண்டினும் பலரே, | 5 | ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே. | |
| தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன் த்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7 | | |
|
|
68 | | கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல் | | தாமரை போல மலரும் ஊர! | | பேணாளோ நின் பெண்டே | | யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே? | |
| பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8 | | |
|
|
69 | | கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே? | | பலர் ஆடு பெருந் துறை, மலரொடு வந்த | | தண் புனல் வண்டல் உய்த்தென, | | உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே! | |
| தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், 'தனக்கு இல்லை' என்று அவன் மறைத்துழிச் சொல்லியது. 9 | | |
|
|
70 | | பழனப் பல் மீன் அருந்த நாரை | | கழனி மருதின் சென்னிச் சேக்கும் | | மா நீர்ப் பொய்கை யாணர் ஊர! | | தூயர்; நறியர் நின் பெண்டிர்: | 5 | பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. | |
| பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10 | | |
|
|