தொடக்கம்   முகப்பு
நற்றாய்
313
தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்,
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
5
காடு இறந்தனள், நம் காதலோளே!
தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3
 

 
371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுக தில்ல
'அறநெறி இது' எனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1
 

 
372
என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழ,
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2
 

 
373
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
வெஞ் சுரம் என் மகள் உய்த்த
5
அம்பு அமை வல் வில் விடலை தாயே!
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3
 

 
374
பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.
தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4
 

 
375
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
5
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங் கணோளே?
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5
 

 
376
நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க,
பூப் புரை உண்கண் மடவரல்
5
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே!
தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6
 

 
377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற, என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7
 

 
378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
துணை இலள் கலிழும் நெஞ்சின்
5
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8
 

 
379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9
 

 
391
மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை!
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ;
5
வெஞ்சின விறல் வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே.
உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன்  த்தது. 1
 

 
392
வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற
ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப்
பரியல் வாழி, தோழி! பரியின்,
எல்லை இல் இடும்பை தரூஉம்
5
நல் வரை நாடனொடு வந்தமாறே.
உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தங் கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. 2
 

 
394
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற;
வெஞ் சுரம் இறந்த அம் சில் ஓதி,
பெரு மட மான் பிணை அலைத்த
5
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.
உடன்போய்த் தலைமகள் வந்துழி, தாய் சுற்றத்தார்க்குச் சொல்லியது. 4
 

 
399
'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்,
மை அற விளங்கிய கழல்அடி,
5
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9
 

 
மேல்