தொடக்கம்   முகப்பு
கரும்பு
4
'வாழி ஆதன், வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்,
5
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 4
 

 
87
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ?
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7

 
மேல்