தொடக்கம்   முகப்பு
மாமரம்
8
'வாழி ஆதன், வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும்
5
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக!' என வேட்டேமே.
இதுவும் அது. 8
 

 
10
'வாழி ஆதன், வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே, யாயே: யாமே,
'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன்,
5
தண் துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 10
 

 
14
கொடிப் பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித் துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.
தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ’ஆதலால் காண்’ எனச் சொல்லியது. 4

 
19
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
5
மாரி மலரின் கண் பனி உகுமே.
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9

 
61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கை வண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி,
5
வதுவை அயர விரும்புதி நீயே.
'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது'

 
213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர்,
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
5
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!
வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3
 

 
349
அவரோ வாரார்; தான் வந்தன்றே
பொரி கால் மாஞ் சினை புதைய
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9
 

 
மேல்