தொடக்கம்   முகப்பு
அவரை
209
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி,
5
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9
 

 
மேல்