209 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று | | யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின், | | கொண்டல் அவரைப் பூவின் அன்ன | | வெண் தலை மா மழை சூடி, | 5 | தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே. | |
| வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9 | | |