தொடக்கம்   முகப்பு
தாமரை
6
'வாழி ஆதன், வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத்
5
தண் துறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே.
களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6
 

 
20
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும்,
காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளி, என்
5
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.
தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. 10

 
53
துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே?
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! நீ உற்ற சூளே.
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்

 
68
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே?
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8

 
94
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
5
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4

 
424
புறவு அணி நாடன் காதல் மட மகள்
ஒள் நுதல் பசப்ப நீ செலின், தெண் நீர்ப்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதல்அம் புதல்வன் அழும், இனி முலைக்கே.
இதுவும் அது. 4
 

 
மேல்