தொடக்கம் முகப்பு
ஆதன்அவினி
 
1
'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
5
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே.
புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது.

 
2
'வாழி ஆதன், வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 2
 

 
3
'வாழி ஆதன், வாழி அவினி!
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்,
5
பூக் கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக!' என வேட்டேமே.
இதுவும் அது. 3
 

 
4
'வாழி ஆதன், வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்,
5
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 4
 

 
5
'வாழி ஆதன், வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'முதலைப் போத்து முழு மீன் ஆரும்
5
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே.
இதுவும் அது. 5
 

 
6
'வாழி ஆதன், வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத்
5
தண் துறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே.
களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6
 

 
7
'வாழி ஆதன், வாழி அவினி!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
5
தண் துறை ஊரன் தன் ஊர்க்
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 7
 

 
8
'வாழி ஆதன், வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும்
5
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக!' என வேட்டேமே.
இதுவும் அது. 8
 

 
9
'வாழி ஆதன், வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 9
 

 
10
'வாழி ஆதன், வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே, யாயே: யாமே,
'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன்,
5
தண் துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 10
 

 
மேல்