36.வென்றிச் சிறப்பு | | வீயா யாணர் நின்வயினானே தாவாதாகும், மலி பெறு வயவே; மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து, செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று, பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் | 5 | யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார், மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர், பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன் புற எருவைப் பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய; | 10 | நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து, உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட; குருதிச் செம் புனல் ஒழுக; செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே! | | துறை:களவழி வண்ணமும் தூக்கும்:அது பெயர்:வாள் மயங்கு கடுந் தார் | |
| |