81.காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல் | | உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின், வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல் அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து, கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து, காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, | 5 | களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப, அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து, வாயில் கொள்ளா மைந்தினர் வயவர், மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத் | 10 | தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும் முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ, கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார், இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப, நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி; | 15 | அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி, கட்டளை வலிப்ப, நின் தானை உதவி, வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்! முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து, சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த் | 20 | தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி, காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர், கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும், சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப் பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து, | 25 | மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து, தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள, கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப் பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து | 30 | மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள், பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்! முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது, தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு, | 35 | துஞ்சா வேந்தரும் துஞ்சுக! விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே! | | துறை:முல்லை வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:நிழல் விடு கட்டி | |
| |