74.நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல் | | கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், | 5 | பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி, கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் | 10 | தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் பருதி போகிய புடை கிளை கட்டி, எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, | 15 | நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள், ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில் எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அமைந்த அரசு துறை போகிய | 20 | வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப! அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின் முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை, 'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், | 25 | தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என, வேறு படு நனந் தலைப் பெயரக் கூறினை, பெரும! நின் படிமையானே. | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:நலம் பெறு திருமணி | |
|
|