71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல் | | அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு, | 5 | கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, | 10 | மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, | 15 | மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ, ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் | 20 | பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், பலி கொண்டு பெயரும் பாசம் போல, திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, | 25 | அறிந்தனை அருளாய்ஆயின், யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே? | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கு பெயர்:குறுந் தாள் ஞாயில் | |
|
|