22.வென்றிச் சிறப்பு | | சினனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்: தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து, | 5 | கடலும் கானமும் பல பயம் உதவ; பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள் மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய; | 10 | ஊழி உய்த்த உரவோர் உம்பல்! பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச் சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல், கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த, | 15 | வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்! உளைப் பொலிந்த மா, இழைப் பொலிந்த களிறு, வம்பு பரந்த தேர், அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு, | 20 | துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை, ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி, கடி மிளைக் குண்டு கிடங்கின், நெடு மதில் நிரைப் பதணத்து, | 25 | அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த, பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ! போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும், நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும், ஒலித் தலை விழவின் மலியும் யாணர் | 30 | நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின், குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி, பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின், ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து, கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி, | 35 | கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக் கருங் கண் பேய்மகள் வழங்கும் பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே! | | துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:கயிறு குறு முகவை | |
| |