88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல் வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது, கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து, தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து, தம் பெயர் போகிய ஒன்னார் தேய, துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5 அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து; பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று; நாம மன்னர் துணிய நூறி, கால் வல் புரவி அண்டர் ஓட்டி, சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உரு கெழு மரபின் அயிரை பரைஇ, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய, கொற்றம் எய்திய பெரியோர் மருக! வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! 15 விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின், உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை, ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை நார் அரி நறவின் கொங்கர் கோவே! உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! 20வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந! நீ நீடு வாழிய, பெரும! நின்வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25 வருநர் வரையாச் செழும் பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர், பாவை அன்ன மகளிர் நாப்பண், புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து, திருவில் குலைஇத் திருமணி புரையும் உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து, வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை, அருவி அரு வரை அன்ன மார்பின் 35 சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ! மாகம் சுடர மா விசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்! ஈங்குக் காண்கு வந்தனென், யானே உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி 40நுண் மணல் அடை கரை உடைதரும் தண் கடல் படப்பை நாடு கிழவோயே! துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:கல் கால் கவணை |