19.அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் | | கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர் கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப, ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர் திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப, செங்கள விருப்பொடு கூலம் முற்றிய | 5 | உருவச் செந் தினை குருதியொடு தூஉய், மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர், கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச, வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து, அவ் வினை மேவலை: ஆகலின், | 10 | எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற அரிது பெறு பாயல் சிறு மகிழானும் கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு யார் கொல்? அளியை | 15 | இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து; நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் அன்ன ஆயின; பழனம் தோறும் அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, | 20 | நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப, அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர் தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த, 'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, | 25 | காணுநர் கை புடைத்து இரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே! | | துறை:பரிசில்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கு பெயர்:வளன் அறு பைதிரம் | |
| |