76.வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் | | களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, | 5 | பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு, கருவி வானம் தண் தளி சொரிந்தென, | 10 | பல் விதை உழவின் சில் ஏராளர் பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி, இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! | 15 | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்: மா சிதறு இருக்கை | |
| |