23.வென்றிச் சிறப்பு | | அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து, நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும், வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண் மன்றம் போந்து, மறுகு சிறை பாடும் | 5 | வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க, பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து, நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட, சிறு மகிழானும் பெருங் கலம் வீசும், போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! | 10 | நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு, வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து, பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் விண் உயர் வைப்பின காடு ஆயின நின் | 15 | மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை, | 20 | நந்து நாரையொடு செவ் வரி உகளும் கழனி வாயிற் பழனப் படப்பை, அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள் குறாஅது மலர்ந்த ஆம்பல், அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே. | 25 | துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:ததைந்த காஞ்சி | |
| |