14.மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல் | | நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின் அளப்பு அரியையே; நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல், ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு | 5 | துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை, அக்குரன் அனைய கைவண்மையையே; அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப! கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; | 10 | எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை! வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்; வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்; ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! | 15 | பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படை ஏர் உழவ! பாடினி வேந்தே! இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக் கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின் முன் திணை முதல்வர் போல, நின்று நீ | 20 | கெடாஅ நல் இசை நிலைஇத் தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே! | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு: செந்தூக்கு பெயர்:சான்றோர் மெய்ம்மறை | |
| |